இரு வேறு சாதியில் பிறந்த பட்டதாரிகள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதால் இளைஞர் படுகொலை!
பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் படித்து வந்த உடுமலையைச் சேர்ந்த தலித் தேவேந்திரர் பிரிவு இளைஞர் சங்கர், பழனியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சாதி தேவர் பிரிவு பெண் கவுசல்யா காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
8 மாதம் கழித்து பெண்ணின் தாய்மாமன் சிலருடன் பட்டப்பகலில் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சங்கரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். கவுசல்யாவையும் வெட்டியுள்ளனர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எங்கே சென்று கொண்டிருக்கிறது நமது தமிழ்ச் சமூகம்?
No comments:
Post a Comment